இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகியாக நடித்ததன் மூலம் கன்னட உலகைத் தாண்டி தென்னிந்திய அளவில் பிரபலமான முகமாக மாறிவிட்டார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இந்த நிலையில் தொடர்ந்து பல மீடியாக்களுக்கு அவர் பேட்டி அளித்து வருகிறார். ஏற்கனவே ஒரு பேட்டியில் அவர் மலையாள திரையுலகம் பற்றி கூறும்போது, மலையாளத்தில் தான் முதன்முதலாக பார்த்தது துல்கர் சல்மான் நடித்த சார்லி படம்தான் என கூறியிருந்தார்.
தற்போது இன்னொரு பேட்டியில் மலையாள திரையுலகம் பற்றி மீண்டும் அவர் சிலாகித்துக் கூறும்போது, “மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்தேன். அதன்பிறகு அந்தப்படத்திற்கு நான் காதலியாகவே மாறி விட்டேன். அந்த அளவுக்கு என்னை அந்த படம் ஈர்த்து விட்டது. கேஜிஎப் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா வந்தபோது அந்த படத்தின் இயக்குனரான நடிகர் பிரித்விராஜை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அப்போது அவரிடம் உடனடியாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுங்கள் என நேரிலேயே கோரிக்கை வைத்தேன். அந்த அளவிற்கு அதன் இரண்டாம் பாகத்தை பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி.