தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்த 'கேஜிஎப் 2' படம் கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. 1000 கோடி வசூலையும் இந்தப் படம் உலக அளவில் கடந்துள்ளது.
கடந்த வாரம் இப்படத்தின் வசூல் குறையும் என்று எதிர்பார்த்தார்கள். புதிய படங்கள் கடந்த வாரம் வெளியானதே அதற்குக் காரணம். ஹிந்தியில் 'ரன்வே 34, ஹீரோபன்ட்டி 2', தெலுங்கில் 'ஆச்சார்யா', தமிழில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இதனால், 'கேஜிஎப் 2' படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் குறையும் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அந்தப் படங்கள் 'கேஜிஎப் 2' படத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையாம். அப்படங்களின் வரவேற்பு சுமாராக இருந்ததால் 'கேஜிஎப் 2' படத்தைப் பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டி உள்ளார்கள். இந்த வாரம் வரை இப்படம் தியேட்டர்களில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே 100 கோடியைக் கடக்கும் என்றும் கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.