ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்துள்ள படம் சாணிக்காயிதம். ஓடிடியில் நேற்று வெளியான இந்த படத்தில் கொடூரமான வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகில் பழிவாங்கும் கதைகள் புதியதல்ல, ஏற்கனவே மில்லியன் கணக்கில் இந்த மாதிரி கதைகள் வந்துள்ளன. இருப்பினும், சாணிக்காயிதம் மற்றும் எனது முந்தைய படமான ராக்கியில் காட்டப்படும் யதார்த்தத்தின் அம்சம் தமிழ் ரசிகர்களுக்கு ஒருவகையில் புதியது.
மற்ற படங்களில் காட்டப்படும் வன்முறை ஸ்டைலாக இருக்கும், அதிலிருந்து இந்த படம் மாறுபடும். சாணிக்காயிதம் திரைப்படம் மூலமாக நான் ஒரு வித்தியாசமான முயற்சியை கொண்டு வர விரும்பினேன், தீவிரமான சூழ்நிலைகளில் ஒரு கதாபாத்திரம் எப்படி எதிர்வினையாற்றும் என்பது பற்றியதுதான் இக்கதை. இருப்பினும், வன்முறையைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல, படத்தில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். என்கிறார்.