தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் |

கடந்த வருடம் ஜனவரியில் தெலுங்கில் நடிகர் ரவிதேஜா நடித்த கிராக் என்கிற படம் வெளியானது. கொரோனா முதல் அலை முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்களை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வரவழைத்தது. அதற்கு முன்னதாக தொடர்ந்து தோல்விகளை தழுவிய ரவிதேஜாவுக்கு இந்தப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்து தலைநிமிர செய்தது. இந்தப் படத்தை இயக்குனர் கோபிசந்த் மாலினி இயக்கியிருந்தார்.
படம் வெளியாகி ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் கதையை 2015-ல் நான் எழுதிய நாவல் ஒன்றில் இருந்து திருடி படமாக எடுத்துள்ளார்கள் என்று சிவசுப்பிரமணிய மூர்த்தி என்பவர் படத்தின் தயாரிப்பாளர் மீது ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டதால் இதன் மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கதை திருட்டு குறித்து சினிமா துறையில் உள்ள தயாரிப்பாளர் சங்கம், எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் புகார் கொடுக்காமல், நீதிமன்றத்திலும் வழக்கு தொடராமல் இப்படி காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளது தெலுங்கு திரையுலகில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது