லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
கடந்த வருடம் ஜனவரியில் தெலுங்கில் நடிகர் ரவிதேஜா நடித்த கிராக் என்கிற படம் வெளியானது. கொரோனா முதல் அலை முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்களை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வரவழைத்தது. அதற்கு முன்னதாக தொடர்ந்து தோல்விகளை தழுவிய ரவிதேஜாவுக்கு இந்தப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்து தலைநிமிர செய்தது. இந்தப் படத்தை இயக்குனர் கோபிசந்த் மாலினி இயக்கியிருந்தார்.
படம் வெளியாகி ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் கதையை 2015-ல் நான் எழுதிய நாவல் ஒன்றில் இருந்து திருடி படமாக எடுத்துள்ளார்கள் என்று சிவசுப்பிரமணிய மூர்த்தி என்பவர் படத்தின் தயாரிப்பாளர் மீது ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டதால் இதன் மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கதை திருட்டு குறித்து சினிமா துறையில் உள்ள தயாரிப்பாளர் சங்கம், எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் புகார் கொடுக்காமல், நீதிமன்றத்திலும் வழக்கு தொடராமல் இப்படி காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளது தெலுங்கு திரையுலகில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது