ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை பாவனாவுக்கு அவரது சொந்த வாழ்வில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளால் சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அந்த கசப்பான நிகழ்வுகளின் நினைவில் இருந்து வெளியேறி படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக கன்னட சினிமாவில் அதிகம் நடிக்கிறார். அடுத்து மலையாளத்திலும் நடிக்க உள்ளார்.
தற்போது பிங்க் நோட் என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'ஹாய்' புகழ் ஜிஎன் ருத்ரேஷ் இயக்குகிறார். இதில் பாவனா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இது இரட்டை சகோதரிகள் பற்றிய கதை. அடுத்து, திக்கக்கக்கொரு பிரேமொண்டர்ன் என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார். இதனை ஆதில் மைமூநாத் அஷ்ரப் இயக்குகிறார். பாவனாவுடன் ஷரபுதீன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இது தவிர தி சர்வைவல் என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். இது மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு படம். இதில் பாவனா குத்துச் சண்டை வீராங்கணையாக நடித்திருக்கிறார். மார்பு புற்றுநோயல் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அதனை எதிர்த்து போராடி எப்படி வாழ்க்கையிலும், குத்துச் சண்டையிலும் வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.