இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‛விக்ரம்' படம் ஜூன் 3ல் திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பாடல்கள், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றன.
விக்ரம் படத்தை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட உள்ளார் கமல். இதற்காக நாடு முழுக்க புரொமோஷன் செய்து வருகிறார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கமலிடம் செய்தியாளர்கள் வட - தென்னிந்திய பேதம் பற்றி கேட்டனர். அதற்கு ‛‛நான் ஒரு இந்தியன். நீங்கள் யார் என்றவர். என்னிடம் வடக்கு, தெற்கு என்ற பேதம் இல்லை. தாஜ்மஹால் என்னுடையது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உங்களுடையது. கன்னியாகுமரி எந்தளவு உங்களுக்கு சொந்தமோ, அதே அளவு காஷ்மீரும் எனக்கு சொந்தம்'' என கூறி நாம் அனைவரும் இந்தியரே என ஒற்றுமைக்கான பாலமாக கமல் பதில் அளித்தார்.