ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சாய் பல்லவி. இந்நிலையில் தெலுங்கில் ராணாவுடன் இணைந்து அவர் நடித்துள்ள விராட பருவம் படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. 2020 கொரோனா காலகட்டத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட இப்படம் சில பிரச்னைகளால் தாமதமாகி வந்தது . இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அப்படம் ரிலீஸிற்கு தயாராகி உள்ளது.
சமீபகாலமாக தெலுங்கில் ராணா நடித்து வரும் படங்கள் தோல்வியை தழுவி வருகின்றன. அதேசமயம் சாய்பல்லவி நடிக்கும் படங்கள் வரவேற்பை பெறுகின்றன. இப்படியான நிலையில் இந்த படம் சாய் பல்லவிக்கு மட்டுமல்லாது தனக்கும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கிறார் ராணா. நக்சல் தொடர்பான கதையில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த படம் ஜூன் மாதம் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது.