தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம், இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பல திரையரங்குகளில் 50 நாட்களுக்கும் குறையாமல் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதுடன் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்கிற மிகப்பெரிய சாதனை இலக்கையும் இந்த படம் கடந்தது. இந்தப்படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஹோம்பலே நிறுவனம் அடுத்ததாக மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
டைசன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். லூசிபர், புரோ டாடி ஆகிய படங்களை தொடர்ந்து பிரித்விராஜ் இயக்கும் மூன்றாவது படம் இது. லூசிபர் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியரும் நடிகருமான முரளி கோபி தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். கேஜிஎப் 2 படத்தை மலையாளத்தில் பிரித்திவிராஜ் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.