ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடகர் என பல அவதாரங்களை சினிமாவில் எடுத்தவர் டி.ராஜேந்தர். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமானார். என்றாலும் அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். முதலில் சிங்கப்பூர் அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தனர். இப்போது அந்த திட்டத்தை மாற்றி அமெரிக்கா அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி இன்று இரவு அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவருடன் மகன்கள் சிம்பு, குறளரசன், மகள் இலக்கியா, மனைவி உஷா ஆகியோரும் உடன் செல்கிறார்கள். அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் டி.ராஜேந்தர் அனுமதிக்கப்படுவதாகவும், இரண்டு மாதங்கள் வரை அங்கேயே தங்கி இருந்து அவர் சிகிச்சை பெறுவார் என்றும் குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.