தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் என பல படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை படத்தில் நடித்துள்ளார். நாளை (ஜூலை 1) திரைக்கு வரும் இந்த படம் தனக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்று கூறுகிறார். மேலும் இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய வேல் படத்தில் அசின், சிங்கம் படத்தில் அனுஷ்கா ஆகியோரின் கதாபாத்திரம் எப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததோ அதேபோன்று யானை படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும்.
கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு இந்த படத்தில் ஒரு நல்ல கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனது திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு கிராமத்து கதாபாத்திரம் என்றால் பிரியா பவானி சங்கர் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று சொல்லும் அளவுக்கு எனது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது என்று கூறும் பிரியா பவானி சங்கர், யானை படம் ஒரு நல்ல குடும்ப பாங்கான படத்தில் நடித்த திருப்தியை கொடுத்துள்ளது என்கிறார்.