தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு கூட்டணியில் 2003ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛வின்னர்'. இந்த படத்தின் காமெடி பெரிதும் பேசப்பட்டது. இப்போதும் டிவியில் இந்த படத்தின் காமெடியோ அல்லது படமே ஒளிப்பரப்பானாலும் ரசிகர்கள் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு கைப்புள்ளயாக அசத்தியிருந்தார் வடிவேலு. இந்நிலையில் ஹிட் படங்களின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் வேளையில் வின்னர் 2 படமும் உருவாக உள்ளது. இந்த தகவலை நடிகர் பிரசாந்தே வெளியிட்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வழிபட்ட நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛‛எனது ‛அந்தகன்' படம் விரைவில் வெளியாகிறது. அடுத்து ‛வின்னர் 2' உருவாகிறது. முதல்பாகத்தை விட இந்த படம் இன்னும் பிரம்மாண்டமாய் இருக்கும்'' என்றார்.