வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சுதீஷ்சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பஹத்பாசில் நடித்த 'மாரீசன்' படம், கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தின் கருவும், வடிவேலுவின் நடிப்பும் பாராட்டப்பட்டது. விமர்சன ரீதியாக படத்துக்கு நல்ல வரவேற்பு, ஆனால், தியேட்டரில் படத்துக்கு ஏனோ வரவேற்பு இல்லை. படம் வெளியான முதல் 3 நாட்கள் ஓகே ரகம். ஒரு சில இடங்களில் ரசிகர்கள் வராததால் தியேட்டர் ஷோ கேன்சல் ஆனது. திங்கள், செவ்வாய் இன்னும் நிலைமை மோசமாக, பல இடங்களில் மாரீசன் ஷோ ரத்தானது. இந்த படத்துடன் வெளிவந்த 'தலைவன் தலைவி' படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. இதுவரை அந்த படம் 30 கோடி வரை வசூலித்ததாக தகவல். ஆனால், மாரீசன் படம் இதுவரை 5 கோடியை கூட தாண்டவில்லை.
அதேசமயம், தலைவன் தலைவி படத்தில் வசூலும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் எதிர்பார்த்ததைவிட மிகக்குறைவான வசூலையே ஈட்டி இருக்கிறது. இந்த படங்களுடன் வெளியான 'மகாஅவதார் நரசிம்மா' படத்துக்கு தமிழகத்தில் பெரிய வசூல் இல்லை. ஆனால் தெலுங்கு, இந்தியில் அந்த படம் 25 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. இத்தனைக்கும் அந்த படம் அனிமேஷன் படம். வடிவேலு படத்துக்கு என்னாச்சு என்று விசாரித்தால், வடிவேலுவை காமெடி ஹீரோவாகவே மக்கள் பார்க்கிறார்கள். அவர் குணச்சித்திர ரோலில் நடித்த மாமன்னனை ஏற்கவில்லை. அதேபோல், மாரீசனையும் விரும்பவில்லை. தவிர, மாரீசன் படத்துக்கு சரியான பப்ளிசிட்டி இல்லை. படத்துக்கு பாடல் வெளியீட்டுவிழா, ப்ரி ரிலீஸ் ஈவன்ட் நடத்தப்படவில்லை. வடிவேலும் ஒன்றிரன்டு பேட்டி கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட்டார். தலைவன் தலைவி படக்குழுவினர் நன்றாக பப்ளிசிட்டி செய்தனர் என்கிறார்கள்.