தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பக்கங்களாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். சரித்திர கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். ஏ. ஆர் .ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் ட்ரைலர் அல்லது டீஸர் வெளியாகும் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் குறித்த ஒரு அப்டேட் வீடியோ வெளியிட்டு உள்ளார்கள். அந்த வீடியோவில், வருகிறான் சோழன் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனால் விரைவில் இப்படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.