இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கல்கி எழுதிய சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்' தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இன்று இப்படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் வெளியாவதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த அறிமுகப் போஸ்டர்களில் சில எழுத்துப் பிழைகள் உள்ளது 'பொன்னியின் செல்வன்' நாவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்கள் இயக்கும் ஒரு படத்தில் இப்படி ஒரு தவறு நிகழலாமா என்று பலரும் சமூக வலைத்தளங்களில் குறைபட்டு வருகிறார்கள்.
முதலில் வெளியான விக்ரம் போஸ்டரில் 'ஆதித்த கரிகாலன்' என்பதற்குப் பதிலாக 'ஆதித்ய கரிகாலன்' என்று இருந்தது. இன்று வெளியான ஜெயம் ரவி போஸ்டரில் 'அருள்மொழி வர்மன்' என்பதற்குப் பதிலாக 'அருண்மொழி வர்மன்' என இருக்கிறது.
மணிரத்னத்திடம் தமிழ் தெரிந்த உதவி இயக்குனர்கள் இல்லையா, அல்லது பொன்னியின் செல்வன் நாவலை முழுவதுமாகப் படித்த உதவி இயக்குனர்கள் இல்லையா என்பது தெரியவில்லை. மக்கள் மனதில் ஆழப் பதிந்த ஒரு நாவலைப் படமாக்கி அது பற்றிய அறிமுகங்களை வெளியிடும் போது தவறுகளைப் பார்ப்பது இயக்குனரின் வேலைதானே என்று வருத்தப்படுகிறார்கள் ரசிகர்கள். போஸ்டர்களிலேயே இப்படி தவறு என்றால் படத்தில் என்ன செய்திருப்பார்கள் என்றும் கேட்கிறார்கள்.