இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
எல்லா முன்னணி நடிகர்களும் தங்கள் வாரிசை சினிமா நட்சத்திரமாக மாற்றிக் கொண்டிருக்கும்போது மாதவன் மட்டும் தன் மகனை தேசத்தக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தி வருகிறார். அவரது மகன் வேதாந்த் நீச்சல் வீரராக வேகமாக வளர்ந்து வருகிறார். மகன் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக துபாயில் குடும்பத்தோடு தங்கி இருந்து வேதாந்துக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்த நிலையில் வேதாந்த், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்துகொண்டு வேதாந்த் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். முந்தைய சாதனையான 16:06:43 என்பதை 16:01:73 என்கிற அளவில் முறியடித்துள்ளார். இதனை மாதவன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.