5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பெரிய வசூலையும், லாபத்தையும் ஒரு படம் கூட கொடுக்கவில்லை என்பது உண்மை. 'டி பிளாக், ராக்கெட்ரி, யானை' ஆகியவை மட்டும் மிகச் சுமாரான வசூலைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். ஆனாலும், அந்தப் படங்கள் ஒரு வாரம் கூட முழுதாகத் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பது சோகத்திலும் சோகம்.
வாரா வாராம் நான்கைந்து படங்கள் வந்தாலும், அடுத்து என்ன பெரிய படம் வரும் என தியேட்டர்காரர்கள் காத்திருக்கிறார்கள். இந்த வாரம் ஜுலை 22ம் தேதியும் நான்கைந்து படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஆனால், அந்தப் படங்கள் எதுவுமே குறைந்தபட்ச எதிர்பார்ப்பை கூட ஏற்படுத்தவில்லை. அவற்றின் வியாபாரங்களும் மிகவும் மந்தமாக இருப்பதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தேஜாவு, மஹா, நதி, வார்டு 126, சிவி 2” ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எந்தப் படம் இரண்டு, மூன்று நாட்களாவது தாக்குப் பிடித்து ஓடும் என்பது வார இறுதியில்தான் தெரியும்.