கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

பாலக்காடு : ''திரைப்பட பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி'' என, விருது பெற்ற நஞ்சியம்மா பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 2020ம் ஆண்டுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், மலையாளத்தில் வெளிவந்த 'அய்யப்பனும் கோஷியும்' பட இயக்குனர் சாச்சிக்கும், சிறந்த துணை நடிகராக, அதில் நடித்த பிஜூ மேனனுக்கும், பின்னணி பாடகி விருது நஞ்சியம்மாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், அப்படத்தில் பாடிய 'கலக்காத்த சந்தனமேரி வெகுவூக பூத்திருக்கு' என்ற பாடல் மிகப்பிரபலம். இதுகுறித்து, நஞ்சியம்மா கூறுகையில், ''என் மனதை தொட்ட பாடல் இது. இதை நானே எழுதி பாடினேன். இசை ரசிகர்கள் எல்லோர் மனதிலும் இப்பாடல் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி'' என்றார்.