இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்த திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் ஜோஷியும் என்ற படத்திற்காக பின்னணி பாடிய 70 வயது நஞ்சம்மாளுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நஞ்சம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நஞ்சம்மாள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர். காந்த குரலுக்கு சொந்தக்காரரான நஞ்சம்மா பாட்டிக்கு சிறந்த பின்னணி பாடகருக்கானது தேசிய விருது வழங்கப்பட்டது பெரு மகிழ்ச்சி. ஒரு ரசிகனாக அவரை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.