வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அம்பிகா. தற்போது டிவி சீரியல்களிலும், சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
“ரொம்ப நாளா இங்க வரணும்னு ஆசை. கொஞ்ச நாளாவே இந்த கோயிலைப் பத்தி பேச்சுல வந்துக்கிட்டே இருந்தது. திடீர்னு முடிவெடுத்து இங்க தரிசனத்துக்கு வந்தேன். தரிசனம் ரொம்ப அழகா இருந்தது. இந்த இடம் பார்க்கிறதுக்கு ஆச்சரியமா இருக்கு, ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.
கோவிலைச் சுற்றி வரும் போது கண்களில் கண்ணீருடனே நடந்து சென்றார். மேலும் அரசியல் குறித்து பேசுகையில், “சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா அனைவருமே சினிமாவிலிருந்து வந்தவர்கள்தானே. நான் பிரபலமாக இருக்கேன்னு அரசியலுக்கு வரக்கூடாது. ரசிகர்கள் நிறைய இருக்காங்கன்னு வரக்கூடாது. ரசிகர்கள் வேற நிஜ வாழ்க்கை வேற. மக்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சி வரணும், மிதப்பு இருக்கக் கூடாது. இறங்கி நடந்து போயி மக்களுக்காக வேலை செய்யணும்” என்றார்.