தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மகாநடி படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் இரண்டாவதாக உருவாகி உள்ள படம் சீதா ராமம். ஹனுராகவபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, முக்கிய வேடத்தில் ஆபரின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்த படம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கதாநாயகிகள் இருவருமே கலந்து கொண்டனர்.
ராஷ்மிகா இந்த படத்தில் நடித்தது குறித்து பேசும்போது, “இந்த படத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இருவரின் கதையை சொல்லி படத்தை நகர்த்தி செல்லும் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரம் பற்றி என்னிடம் இயக்குனர் கூறியபோது இதை என்னால் செய்து விட முடியுமா என்கிற ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் இயக்குனர் கொடுத்த உற்சாகத்தில் இந்த படத்தில் நடித்துள்ளேன்” என்று கூறினார். இந்த படம் 70களில் ராணுவ பின்னணியில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ளது