தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'தி லெஜன்ட்' என்ற படத்தின் மூலம் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமா உலகில் ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட ஒரு நடிகர் கதாநாயகனாக அறிமுகமாவது இதுவே முதல் முறையாக இருக்கலாம். தமிழில் மட்டுமல்ல, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் நாளை(ஜூலை 28) வெளியாகிறது.
பிரபல விளம்பரப் பட இயக்குனர்களும், அஜித் நடித்த 'உல்லாசம்' மற்றும் விக்ரமாதித்யா, ஷெரின், காயத்ரி ரகுராம் நடித்த 'விசில்' படத்தையும் இயக்கிய ஜேடி - ஜெர்ரி இப்படத்தை இயக்கியுள்ளார்கள். சுமார் 19 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்காக துபாய், மும்பை, ஐதராபாத் என பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தியுள்ளார் சரவணன். ஆனால், சென்னையில் மட்டும் நடத்தவில்லை. இசை வெளியீட்டுடன் நிறுத்திக் கொண்டார். மற்ற முன்னணி நடிகர்களின் படங்களைப் போல இப்படத்திற்கும் நாளை அதிகாலை 4 மணி காட்சி, 8 மணி காட்சி ஆகியவை நடக்கின்றன. இது தமிழ் திரையுலகத்தினரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.