இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமா உலகின் மூத்த நடிகரான கமல்ஹாசன் கடந்த பல வருடங்களாகவே ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனத்தைத் தயாரித்து வருகிறார். அந்த நிறுவனம் மூலம் தான் நடிக்கும் படங்களை மட்டுமல்லாமல் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்துள்ளார்.
அவருடைய தயாரிப்பில் இதற்கு முன்பு மற்ற நடிகர்களில் சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', மாதவன் நடித்த 'நள தமயந்தி', விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்கள் மட்டுமே தயாராகியுள்ளன. தற்போது அவரது நிறுவனம் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிக்க உள்ள படங்களைத் தயாரிக்க உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அடுத்து ரஜினிகாந்த், விஜய் நடிக்க உள்ள படங்களையும் தயாரிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. 'விக்ரம்' படம் மூலம் கிடைத்த மகா லாபத்தை மீண்டும் சினிமா தயாரிப்பில் முதலீடு செய்யும் முடிவில் இருக்கிறாராம் கமல்ஹாசன். ரஜினி, விஜய் படங்கள் பற்றிய பேச்சு வார்த்தை முடிவடைந்த பின் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.