‛லொள்ளுசபா' வெங்கட்ராஜ் காலமானார்: நாளை வேளச்சேரியில் இறுதிசடங்கு | ‛என் தாய்மொழியை காக்க, பெரும் சேனை ஒன்று உண்டு': வெளியானது பராசக்தி டிரைலர் | அஜித் குமாரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 இயக்குனர்கள்! | ரன்வீர் சிங் நடித்த ‛துரந்தர்' ஒரு தலைசிறந்த படைப்பு! -பாராட்டிய சூர்யா | பாரீசில் நாளை வெளியிடப்படும் வாரணாசி அறிவிப்பு டீசர்! | அஜித்தின் மங்காத்தா ஜனவரி 23ல் ரீரிலீஸ்! | புதிய சாதனை படைத்தது 'ஜனநாயகன்' டிரைலர் | 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் உரிமம் எத்தனை கோடி தெரியுமா? | யஷ் 40வது பிறந்தநாளில் 'டாக்சிக்' படத்தின் டிரைலர்! | 'அரசன்' படத்தில் தனுஷா? தாணு பதில் |

'மவுண்ட் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் 2022' என்ற குறும்பட திருவிழாவில் இயக்குனர் வசந்தபாலன் பேசியதாவது: இந்த குறும்பட விழாவில் கலந்துகொண்ட ஐந்து குறும்படங்களை பார்த்த போது, இன்றைய இளைஞர்கள் டெக்னாலஜியை பயன்படுத்தி இயக்கனருக்கான திறமையை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்கள். இன்றைய படைப்பாளிகளுக்கு டெக்னாலஜி கதவுகள் அகலமாக திறந்தே இருக்கின்றன. அதனால் சாதாரண ஒரு கதையை கூட அழகாக எளிதாக படமாக்க முடிகிறது.
அதேசமயம் தமிழ் சினிமாவில் கதாசிரியர்களே இல்லை. தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம். குறும்படங்களால் இயக்குனர்கள் உருவாகின்றனர் ஆனால், எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவுக்குள் வரவே இல்லை. இனிமேல் கதாசிரியர்களிடம் கதையை பெற்று அதன் பின் நாயகர்களை தேடிச் செல்ல வேண்டும். இயக்குனர்களை போல எழுத்தாளர்களுக்கும் போட்டி வைத்து விருது தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.




