ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
வலிமை படத்தை அடுத்து மீண்டும் எச்.வினோத் இயக்கும் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்.
இந்த நிலையில் அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இந்த கொண்டாட்டத்தை கடலுக்கு அடியிலும் நடத்தி உள்ளார்கள். அதாவது கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் மூலம் 100 அடி ஆழத்திற்கு சென்று அஜித்தின் பேனர்களை வைத்துள்ளார்கள். அது குறித்த ஒரு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அமோகமான வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.