இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சர்க்காரு வாரி பாட்டா படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் டைரக்ஷனில் மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகியுள்ளது. அதேசமயம் இதற்கு முன்னதாக ஏற்கனவே இயக்குனர் ராஜமவுலி, அடுத்ததாக தான் மகேஷ்பாபு படத்தை இயக்க உள்ளதாக கூறியிருப்பதால் அந்த படம் எப்போது என்பது குறித்த எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. காரணம் முதல் முறையாக ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார் என்பதுதான்.
இந்த நிலையில் ராஜமவுலி படத்தில் நடிப்பது குறித்து மகேஷ்பாபு கூறும்போது, ‛‛இயக்குனர் ராஜமவுலியின் ஒரு படத்தில் நடித்தால் அது 25 படங்களில் நடித்ததற்கு சமம். அந்த படத்திற்காக உடல் ரீதியாக நிறைய தயாராக வேண்டும். அவருடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.