பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரது வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான படம் 'டர்ட்டி பிக்சர்'. நடிகை வித்யாபாலன் கதாநாயகியாக நடித்த இந்த படம் அவரது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் 10 வருடம் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.
இந்த இரண்டாம் பாகத்திற்கான கதையை தயார் செய்யும் பொறுப்பை பிரபல கதாசிரியர் கனிகா தில்லானிடம் ஒப்படைத்துள்ளார். அவருக்கு உதவியாக இன்னொரு கதாசிரியரும் இந்த இரண்டாம் பாகத்திற்கு பணிபுரிகிறார். அதே சமயம் முதல் பாகத்தில் கதாசிரியராக பணியாற்றிய ரஜத் அரோரா இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு கங்கனாவை ஏக்தா கபூர் அணுகியதாகவும் அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க டாப்ஸியும், கீரீத்தி சனானும் தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தின் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த வித்யா பாலன், இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா என்கிற பேச்சே எழவில்லை என்பது ஆச்சரியம் தான்.