தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சின்னத்திரையில் ஒளிபரப்பான சந்தனகாடு தொடரை இயக்கிய வ.கவுதமன் அதன்பிறகு மகிழ்சி, கனவே கலையாதே படங்களை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தற்போது படம் இயக்க வந்திருக்கிறார். படத்திற்கு மாவீரா என்று டைட்டில் வைத்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கவுதமன் கூறியதாவது: தமிழர்களின் தொண்மை மிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்பு படுத்தி கொள்ள செய்யும் வகையில் இந்த படம் இருக்கும். முந்திரிக்காடு வன்னிகாடு பின்னணியில் இந்த படம் உருவாகிறது. நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்கிறார் கவுதமன்.