வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் சந்தானம். தனது டைமிங் காமெடி மூலம் குறுகிய காலத்தில் மார்க்கெட்டை பிடித்த சந்தானம், ஒரு கட்டத்தில் ஹீரோவாக உருவெடுத்தார். அதோடு காமெடியனாக நடிப்பதை முழுமையாக தவிர்த்து வந்தார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு போன்ற சில படங்கள் ஓரளவு வெற்றி பெற்றபோதும் சமீபத்திய படங்கள் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சந்தானம். அப்போது ஆர்யா நடிக்கும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் காமெடியாக நடிக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வருமாறு என்னிடத்தில் கேட்டுக் கொண்ட ஆர்யா, என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு வீட்டில் சும்மாதான் இருக்கிறேன் என்று நான் கூறினேன். அதற்கு ஆர்யா, இங்கேயும் வந்து சும்மா இருந்துட்டு போ என்று சொல்லிதான் என்னை அழைத்தார் என்றும் காமெடியாக பேசினார். அந்த வகையில் மீண்டும் சந்தானம் காமெடியனாக நடிக்கப் போவதாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது சந்தானமே அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.