400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து ஜுன் 3ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் 'விக்ரம்'. ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லராக வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்று வசூலைக் குவித்தது.
தமிழில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக புதிய சாதனையையும் படைத்தது. தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஜுலை 8ம் தேதி இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். ஆனால், ஒரு மாதத்திற்குள்ளாகவே தியேட்டர்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து ரசிகர்களின் கூட்டம் குறைய ஆரம்பித்ததால் ஒரு மாத ஓடிடி வெளியீட்டிற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் அதற்குப் பின்னும் சில பல தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டுதான் இருந்தது.
இன்றுடன் படம் வெளிவந்து 100 நாட்கள் ஆகிறது. இன்று கூட சென்னை, கோவை, தர்மபுரி ஆகிய ஊர்களில் தலா ஒரு தியேட்டரில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடிடியில் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகும் ஒரு படம் தியேட்டர்களில் ஓடி 100வது நாளைத் தொட்டிருப்பது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
'விக்ரம்' 100வது நாளைத் தொட்டிருப்பது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “ரசிகர்களின் ஆதரவோடு, 'விக்ரம்' திரைப்படம் 100வது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த உணர்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன். 'விக்ரம்' வெற்றிக்குக் காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷுக்கு என் அன்பும், வாழ்த்தும்” எனத் தெரிவித்துள்ளார்.