படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜமவுலி அடுத்தப்படியாக மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. தற்போது மகேஷ்பாபு இயக்குனர் திரி விக்ரம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதை முடித்த பிறகே இந்த படத்தில் நடிக்க உள்ளார். அடுத்தாண்டு ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்நிலையில் டொரண்டோவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ராஜமவுலி பங்கேற்றுள்ளார். அப்போது தனது அடுத்தப்படம் பற்றி அவர் பேசும்போது, ‛‛மகேஷ்பாபு உடன் எனது அடுத்தபடம் உருவாகிறது. இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் மாதிரியான படங்கள் பாணியில் ஆக்ஷன் அட்வென்ச்சர் நிறைந்த இந்திய படமாக இருக்கும்'' என்றார்.
இந்த படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.