ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காதல் தோல்வி காரணமாக நடிகை தீபா என்பவர் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் துணை நடிகையாக சில படங்களில் நடித்தவர் பவுலின் ஜெஸிகா எனும் தீபா. சமீபத்தில் வெளியான வாய்தா படத்தில் நாயகியாக நடித்தார். சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
போலீசார் மேற்கொண்ட முற்கட்ட விசாரணையில் தீபா ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் கைகூடாததால் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சம்பந்தப்பட்ட அந்த நபர் ஒரு தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது. மேலும் இறப்பதற்கு முன் தீபா கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
அதில், ‛‛தான் ஒருவரை உயிருக்கு காதலித்ததாகவும், அந்த காதல் கைகூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், தனது இறப்பிற்கு யாரும் காரணமில்லை'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளாராம்.
நடிகை தீபா பவுலின் தற்கொலை சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.