ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகி உள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கியமான பெண் கதாபாத்திரங்களான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராயும், குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை. புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் த்ரிஷா எப்போதுமே ஐஸ்வர்யா ராய் பற்றி சிலாகித்தே பேசி வருகிறார்.
அதேசமயம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதுநாள்வரை இவர்கள் ஒன்றாக பணியாற்றிய புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நந்தினியும் குந்தவையும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் சிலர் சோழர்காலத்தின் செல்பி ராணிகள் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்