கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' |
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தாயாரும், மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மனைவியுமான இந்திரா தேவி(70) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று(செப்., 29) காலமானார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் மகேஷ்பாபு. இவரது தந்தையான நடிகர் கிருஷ்ணாவும் அந்தக்காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். இவரது மனைவியான இந்திரா தேவி கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில தினங்களாக இவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
இந்திராதேவியின் உடல் அஞ்சலிக்காக ஐதராபாத்தில் உள்ள பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த இந்திராதேவியின் உடலுக்கு நாகார்ஜூனா, சுகுமார், ராணா, மோகன்பாபு, தமன், விஜய் தேவரகொண்டா, அல்லு அரவிந்த், கொரட்டலா சிவா, பிரபாஸ் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருப்பதுடன் மகேஷ்பாபுவிற்கு ஆறுதல் கூறியும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே பாட்டி இந்திராதேவியின் உடலை பார்த்து மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா தேம்பி தேம்பி அழுவதும், அவரை மகேஷ்பாபு தேற்றும் வீடியோவும் வைலரானது.