துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
அந்த காலத்தில் ஒலிச்சித்ரம் ரொம்பே பேமஸ், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், மதுரை வீரன், நாடோடி மன்னன் படங்களின் ஒலிசித்திரங்கள் மிகவும் பிரபலம். இதனை வானொலிகள் ஒளிபரப்பும். அதேபோல ரேடியோ நாடகங்களும் அந்த காலத்தில் புகழ்பெற்றவை. அது மாதிரியான ஒன்றுதான் நாவல்களை ஆடியோ நாடகங்களாக தயாரித்து வெளியிடுவது. இந்த துறையில் டிசி என்ற நிறுவனம் முன்னணியில் இருக்கிறது.
இந்த நிறுவனம் வெளியிடும் பிரத்யேகமாக ஆடியோ நாடகங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக 'தி சான்ட்மேன்: ஆக்ட்' எனும் பெயரிலான ஆடியோ நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் இந்த நாடகத்தின் 3வது பாகம் இந்தியாவில் வெளியாக உள்ளது. இதில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். அதாவது குரல் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருப்பதாவது: இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்' போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இருக்கிறது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான். நீல் கியாமன் எழுதிய தி சான்ட்மேன் எனும் ஆடியோ நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என்னுடைய பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.