இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அந்த காலத்தில் ஒலிச்சித்ரம் ரொம்பே பேமஸ், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், மதுரை வீரன், நாடோடி மன்னன் படங்களின் ஒலிசித்திரங்கள் மிகவும் பிரபலம். இதனை வானொலிகள் ஒளிபரப்பும். அதேபோல ரேடியோ நாடகங்களும் அந்த காலத்தில் புகழ்பெற்றவை. அது மாதிரியான ஒன்றுதான் நாவல்களை ஆடியோ நாடகங்களாக தயாரித்து வெளியிடுவது. இந்த துறையில் டிசி என்ற நிறுவனம் முன்னணியில் இருக்கிறது.
இந்த நிறுவனம் வெளியிடும் பிரத்யேகமாக ஆடியோ நாடகங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக 'தி சான்ட்மேன்: ஆக்ட்' எனும் பெயரிலான ஆடியோ நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் இந்த நாடகத்தின் 3வது பாகம் இந்தியாவில் வெளியாக உள்ளது. இதில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். அதாவது குரல் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருப்பதாவது: இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்' போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இருக்கிறது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான். நீல் கியாமன் எழுதிய தி சான்ட்மேன் எனும் ஆடியோ நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என்னுடைய பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.