இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
திரைப்பட இயக்குனர்கள் தங்கள் கதைகளை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வந்தார்கள். கதை தொடர்பான பிரச்னைகள், வழக்குகள் வந்தால் இந்த பதிவு அதில் முக்கியமான பங்கு வகிக்கும். ஆனால் இந்த கதை பதிவில் முறைகேடுகள் நடப்பதாக கூறி இனி இயக்குனர்கள் தமிழ்நாடு இயக்குனர் சங்கத்திலேயே கதையை பதிவு செய்யலாம் என்று அறிவித்தது. இந்த கதை பதிவு தொடர்பாக இரு சங்கங்களும் மோதிக் கொண்டிருந்தன. இதில் தற்போது சுமுகமான முடிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எழுத்தாளர் சங்கத்திற்கும், நமது சங்கத்திற்கும் நடைமுறையில் இருந்த கதைப்பதிவு ஒப்பந்தம் புதுப்பிக்காததாலும், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை கட்டனம் மற்றும் கதை பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாலும் இயக்குனர் சங்க உறுப்பினர்கள் நமது சங்கத்திலேயே கதையை பதிவு செய்யலாம் என முடிவு செய்தோம். இந்த நிலையில் எழுத்தாளர்சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் நமது சங்க நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து அனைத்து பிரச்னைகளையும் சமூகமாக முடித்து தருகிறோம். எழுத்தாளர் சங்கத்தின் ஆணி வேரான கதை பதிவை எழுத்தாளர் சங்கத்திற்கே தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அனைத்து கட்டணங்களையும் கணிசமாக குறைப்பதாக கூறினார். கதை தொடர்பான பிரச்னை ஏற்பட்டால் தன்னிச்சையாக செயல்படாமல் பெப்சி அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக கூறியிருக்கிறார். எனவே இரு சங்கமும் இணைந்து செயல்படும் நோக்கோடு எழுத்தாளர் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இனி இயக்குனர்கள் தங்கள் கதையை எழுத்தாளர் சங்கத்திலேயே பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.