தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

'பாகுபலி' படத்திற்குப் பிறகு தெலுங்கு நடிகரான பிரபாஸ் பான் இந்தியா நடிகராக மாறினார். அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதேஷ்யாம்' ஆகியவை தோல்வியைத் தழுவினாலும் பிரபாஸுக்கு பிரம்மாண்ட படங்களின் வாய்ப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது.
தற்போது பிரம்மாண்டப் படங்களான 'ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'ஆதி புருஷ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால், அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாருதி இந்தப் படத்தை இயக்குகிறாராம். நிதி அகர்வால், மாளவிகா மோகனன் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல். வில்லனாக நடிக்க ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்திடம் பேசி வருகிறார்களாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தமாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.