தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு சேலை, வேட்டி மற்றும் இனிப்புகள் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டது. இதற்காக நடிகர் சூர்யா 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். அதோடு நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், கோவை சரளா, ஸ்ரீமன், நாசர், லதா, விமல், கருணாஸ், மனோபாலா, தளபதி தினேஷ், விக்னேஷ், வாசு தேவன் ஆகியோர் இணைந்து 2 லட்சம் ரூபாய் வழங்கினர். இந்த தொகையை கொண்டு நலிந்த கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தில் நடந்த விழாவில் கார்த்தி இந்த பரிசுகளை வழங்கினார். இதில் பூச்சி முருகன், மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெளியூரில் இருக்கும் கலைஞர்களுக்கு பரிசு பொருட்கள் அவர்களது வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.