எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை |
சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். 'ஜாதி ரத்னலு' தெலுங்கு படத்தை இயக்கிய அனுதீப் இயக்கி இருக்கிறார். உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21ம் தேதி வெளிவருகிறது. இது தொடர்பாக சிவகார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: வன்முறையோ, வில்லனோ இல்லாமல் ரொம்ப ஜாலியாக உருவாகி உள்ள படம் பிரின்ஸ். இரண்டரை மணி நேரம் மக்களை சந்தோஷப்படுத்தணும் என்பதை மட்டுமே மனதில் கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதை ஒரு புதிய முயற்சின்னும் சொல்லலாம். ஒரு வெளிநாட்டு பெண்ணை தமிழ் பையன் காதலிக்கிறது தான் படம். காமெடி பண்றது ரொம்ப கஷ்டமான விஷயம். அதை சவாலா ஏத்துக்கிட்டு பண்ணியிருக்கோம்.
இது பக்கா தமிழ் படம் தான், தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறோம். மற்றபடி இரு மொழிகளில் தயாராகவில்லை. இயக்குனர் தெலுங்கு என்பதால் அப்படியான ஒரு தகவல் பரவி இருப்பதாக நினைக்கிறேன். ஹீரோயின் கதைப்படி வெளிநாட்டு பெண் என்பதால் மரியாவை நடிக்க வைத்திருக்கிறோம். இருவருமே ஆசிரியர்களாக நடித்திருக்கிறோம். இன்றைக்கு முக்கிய தேவை மனிதாபிமானம் அதை இந்த படம் வலியுறுத்துகிறது.
எனது படங்கள் தயாரிப்பாளருக்கு தியேட்டரில் வெளிவருதற்கு முன்பே லாபத்தை கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த படமும் அப்படித்தான் ஆனால் எவ்வளவு லாபம் என்று தெரியாது. அடுத்து மாவீரன் படம் வெளியாகும், அயலான் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. அடுத்து கமல் சார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.