ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான இண்டியானா ஜோன்ஸ், டிரஷ்சர் ஹண்டர் பாணியிலான புதையலை தேடிச் செல்லும் அட்வென்ஜர் படமாக உருவாகிறது. இதன் கதையை ராஜமவுலியின் தந்தையும் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படத்தின் கதையை எழுதியவருமான விஜயேந்திர பிரசாத் எழுதி இருக்கிறார்.
இந்த படமும் 500 கோடிக்கும் கூடுதலான பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தீபிகா ஹாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம் உலகம் அறிந்த நடிகையாக இருப்பதால் அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து அது இறுதிகட்டத்தையும் அடைந்துள்ளது. இதுவல்லாமல் ஒரு முக்கியமான ஹாலிவுட் நடிகர், நடிகையும் நடிக்க இருக்கிறார்கள்.
தீபிகா தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக நாக் அஸ்வின் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.