தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவும், மற்ற தென்னிந்திய மொழி சினிமாவும் அவ்வப்போது கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமான படங்களை வெளியிட்டு வருகின்றது. பெண்களை மையப்படுத்திய அந்தப் படங்கள் சிறந்த படங்களாக அமைந்துவிட்டால் அதற்கான வரவேற்பும் கதாநாயகர்களின் படங்கள் அளவுக்கு இருக்கிறது.
இந்த வாரம் நவம்பர் 11ம் தேதி சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'யசோதா' படம் தமிழ், தெலுங்கிலும், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' படமும் வெளியாகிறது. இரண்டு படங்களிலும் கதாநாயகிகளின் போராட்டம்தான் படத்தின் மையக்கருவாக இருக்கிறது.
'யசோதா' படத்தில் சமந்தா, வாடகைத் தாய் கதாபாத்திரத்தில் நடித்துளளதாகத் தெரிகிறது. 'டிரைவர் ஜமுனா' கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா பெண் டாக்சி டிரைவராக நடித்திருக்கிறார். இவர்கள் தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள்தான் இந்தப் படங்களின் கதை. பெண்களை முன்னிலைப்படுத்தும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளிவருவது ஆச்சரியம்தான்.
அந்தப் படங்களோடு நவம்பர் 11ம் தேதியன்று 'மிரள், பரோல், திருமாயி' ஆகிய படங்களும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.