ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள யசோதா திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். நேற்று படம் வெளியானது முதல் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் பாசிட்டிவான விமர்சனங்களும் வெளிவர ஆரம்பித்தன. இதனால் உற்சாகமான படத்தின் இயக்குனர்கள் தங்களது குழுவினர் சிலருடன் சமந்தாவின் வீட்டிற்கு நேரிலேயே சென்று இந்த வெற்றி தகவலை அவரிடம் கூறி தங்களது மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்த படத்திற்காக சமந்தா ஆக்சன் காட்சிகளில் நடித்தது உட்பட பலவிதமான கடின உழைப்பு கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல கடந்த சில நாட்களுக்கு முன்பு, தசை அழற்சி நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்து வருவதாகவும் தனது வேதனையையும் வெளிப்படுத்தியிருந்தார். இது அவரது ரசிகர்களிடம் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. பலரும் அவர் விரைவில் குணமாக ஆறுதல் கூறிவந்த நிலையில், அவர் நடித்துள்ள யசோதா படத்தின் வெற்றி, அவருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.