இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இதுகுறித்த பரபரப்பான ஒரு சில நிகழ்வுகள் அரங்கேறி தற்போது நிலைமை சுமுகமாக மாறி உள்ளது. நயன்தாராவை பொறுத்தவரை தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் புதிய படம் ஒன்றில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல, இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
மாதவன், சித்தார்த் இருவருக்குமே மிக நெருங்கிய நண்பரான, அவர்களது படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சசிகாந்த், இந்த படத்தின் மூலம் இயக்குனராகிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆயுத எழுத்து படத்தில் மாதவன், சித்தார்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல மாதவனும் நயன்தாராவும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.