ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்த 'புஷ்பா' தெலுங்குப் படம், பான் இந்தியா படமாக கடந்த வருடக் கடைசியில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இப்படத்தை ரஷ்ய மொழியில் டப்பிங் செய்து வரும் டிசம்பர் 8ம் தேதி வெளியிட உள்ளார்கள். படத்திற்கான பிரிமீயர் காட்சிகள், டிசம்பர் 1ம் தேதி மாஸ்கோவிலும், டிசம்பர் 3ம் தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் நடைபெற உள்ளது. அதில் படக்குழுவினரும் கலந்து கொள்ள உள்ளார்களாம். ரஷ்யாவில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய மொழித் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகு தெலுங்கு மொழிப் படங்கள் உலக அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளன. 'புஷ்பா, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரம்மாண்டமான படங்கள் தெலுங்கில் தயாராகி வருகின்றன.