தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சமூக வலைத்தளங்களில் படம் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த வடிவேலு சாமி தரிசனத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
செந்தில் வேல்முருகனை தரிசிக்க வந்தது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனதில் கஷ்டம் இருந்தால் திருச்செந்தூர் முருகனை வணங்கும்போது, உங்க கஷ்டமெல்லாம் தீரும். உங்க குறையெல்லாம் தீரும். எல்லா வளமும் பெற்று நல்லா இருப்போம். 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. மக்கள் அதைப்பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
படம் பார்த்தவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்கிறார்கள். பெரிய வெற்றிப்படமாகியிருப்பதால் தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக உள்ளனர். அடுத்து நான் நடிக்கும் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் நல்ல கதை உள்ள படம். இது மக்களுக்கு பிடித்த படமாக அமையும். சந்திரமுகி 2 படத்திலும் நடிக்கிறேன். நான் மீண்டும் திரைக்கு வந்ததை ரசிகர்கள் சந்தோஷமா ரசிக்கிறாங்க. இது கடவுளுடைய ஆசீர்வாதம். என்றார்.