தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. தமிழில் விஜய் உடன் இவர் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தற்போது ஹிந்தியிலும் நடித்து வரும் இவர், சித்தார்த் மல்கோத்ரா உடன் இணைந்து மிஷன் மஜ்னு என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்பட விழாவில் பேசிய ராஷ்மிகா : பாலிவுட்டில் தான் நிறைய ரொமான்ட்டிக் பாடல்கள் வருகின்றன. தென்னிந்தியாவில் மசாலா மற்றும் ஐட்டம் பாடல்கள் தான் அதிகம் வருகின்றன. ஹிந்தியில் எனது முதல் ரொமான்ட்டிக் பாடல். இதை காண ஆவலாய் உள்ளேன் என்றார்.
ஹிந்தியில் இவரின் முதல் ரொமான்ட்டிக் பாடல் என்பதற்காக தென்னிந்திய சினிமா பாடல்களை இப்படி பேசுவதா என கூறி இவரின் இந்த கருத்திற்கு தென்னிந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இடத்திற்கு, நேரத்திற்கு தகுந்தார் போல் இவர் பேசுகிறார் என வசை பாடுகின்றனர்.
சமீபத்தில் கன்னட திரையுலகத்தை புறக்கணிக்கும் விதமாக இவர் பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இப்போது இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளார்.