தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாகுபலி, பாகுபலி 2 , ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த ஆர்ஆர்ஆர் படம் சமீபத்தில் ஜப்பானில் திரையிடப்பட்டது.
இந்த நிலையில் ராஜமவுலியின் படங்களுக்கு வழக்கமாக கதை எழுதி வரும் அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத் தற்போது ராஜமவுலி - மகேஷ்பாபு இணையும் படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறுகையில், ஏற்கனவே ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் இரண்டு பாகங்களாக உருவானது போன்று அடுத்து மகேஷ்பாபுவை வைத்து அவர் இயக்கும் படமும் இரண்டு பாகங்களும் அதற்கு மேலும் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் ஹீரோ கேரக்டர் ஒன்று தான். என்றாலும் கதைக்களமானது வெவ்வேறாக இருக்கும். அந்த வகையில் இந்த படம் நான்கு பாகங்கள் உருவாவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்த படத்திற்கான கதை தற்போது தயாராகி விட்டதால் 2023ம் ஆண்டில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.