வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 67 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைகின்றனர். அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. திரிஷா, சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது . இந்த தகவலை நடிகர் மனோபாலா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "விஜய் 67 படப்பிடிப்பு இன்று(ஜன., 2) துவங்கியது . லோகேஷ் மற்றும் விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி" என கூறியுள்ளார் .