தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் என இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் மற்றும் மலையாளத்தில் கிறிஸ்டி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபலங்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டல்கள், கடற்கரை என புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாட மாளவிகா மோகனன் ஹிமாலயா பக்கம் சென்று அமைதியாக தனது புத்தாண்டு தினத்தின் முதல் நாளை கழித்திருக்கிறார்.
மலைப்பகுதியில் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட தன்னுடைய சில போட்டோக்களை பகிர்ந்து கொண்டுள்ளார் மாளவிகா மோகனன். மேலும் புத்தாண்டு பற்றி அவர் கூறும்போது, “இந்த வருடத்தின் முதல் நாள் அவ்வளவு அழகானதாக இருந்தது. இங்கு என்னைச் சுற்றிலும் மலைகளும் இளஞ்சிவப்பு நிற பூக்களுமாக இந்த நாளை ரொம்பவே இனிமையாக்கி விட்டன. கடந்தாண்டு எனக்கு மிகவும் நல்லபடியாகவே கடந்து சென்றதாக நான் உணர்கிறேன். இந்தாண்டும் அதே போல நிறைய மகிழ்ச்சி, அன்பு, முத்தங்கள் நிறைந்ததாக உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.