ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த படம் நான்கு பாகங்கள் வரை உருவாக வாய்ப்பு இருப்பதாக அப்படத்திற்கு கதை எழுதி வரும் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் சில தினங்களுக்கு ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் கமல்ஹாசனும் ராஜமவுலியும் சந்தித்துக் கொண்டதாகவும், அப்போது கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்க ராஜமவுலி பேசி உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அதையடுத்து மணிரத்னம், பா. ரஞ்சித். எச்.வினோத், மகேஷ் நாராயணன், லோகேஷ் கனகராஜ் என பலரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் கமல் நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குவார் என்றும் சொல்கிறார்கள். என்றாலும் இந்த படம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.