தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 42வது படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 13 கெட்டப்புகளில் சூர்யா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மட்டுமே நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளை ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இயக்கி வருகிறார். சூர்யாவுடன் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் இணைந்து நடித்து வரும் இந்த சண்டை காட்சி ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் இந்த சண்டை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். மேலும் இரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யா 42 வது படத்தின் முதல் பாகம் முடிவடைந்து ரிலீஸ் ஆனதும், இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என்றும் படக் குழுவில் தெரிவிக்கிறார்கள்.